Sunday, 26 June 2016


மெக் முல்லறினால் ஆங்கிலேயர் சாப்பார்க சொல்ப்பட்ட பொய்கள். 1. சனாதனதர்னம் கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்தான் தோற்றியது. 2. வேதங்கள் எந்தவிதமான உணர்வுபூவமான சத்த அலைகளை கொண்டதில்லை 3. புரானங்களும் இதிகாசம்களும் பொழுது போக்குக்காக எழுதப்பட்ட கதைகள் 4. ஆரியர்கள் கைபர் கணவாய் ஊடாக இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தார்கள். (ஆரியர்கள் என்று இவர் சொன்னது ஆங்கிலேயர்கள்தான்) 5. தென்இந்தியாவில் வசித்தவர்கள் திராவிட தேசத்தவர்கள் அதாவது காட்டுமிராண்டிகள் 6. ஆரியர்கள் உயர்வான இனம் 7. சனாதன தர்மம் தென் இந்தியாவில் வேனும் என்றே புகுத்தப்பட்டது 8. சனாதன தர்மத்துக்கு எந்தவித விஞ்ஞான அடிப்படையும் இல்லை 9. இந்தியாலில் எந்தவிதமான உயர்ந்த அரச ராட்சியங்களும் இருந்ததில்லை.

தமிழர்களும் அவர்களின் ஐவகை நிலங்களும் ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை, தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும். குரோஸ் ஹோட்ஜ் (Grose Hodge) நிலவியல் அறிஞர் நீலத்திரைக்கடல் ஓரத்திலே - நின்று நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை - வட மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு (பாரதி - செந்தமிழ்நாடு : 5) ஒரு இனம் பரிமானிக்கவேண்டும்மாயின் நிலமும் முக்கியம் உறவுகளே- திராவிட நாடு என்று சொல்லி நாம் தமிழ் இனம் வளர்க்கமுடியாது.

பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி வளையுடைக் கையிற் சூல மேந்தி கரியின் உரிவை போர்த்தணங் காகிய அரியின் உரிவை மேகலை யாட்டி சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் தலைமிசை நின்ற தையல் (சிலம்பு. வேட்டுவவரி, 54-66)

நாகர்கள் என்பது யார்? எப்பிரதேசங்களில் வசித்தார்கள்? என்பது பற்றி விஞ்ஞான விளக்கங்களுடன். பூமியின் உள்ளே உள்ள லாவா எனப்படும் நெருப்பு குளம்பானது சில காலங்களில் மேல் எழும்பி நிலங்களாக உருவாகின்கின்றன. இவ்வாறு மேலே எழும் நெருப்புக்குழம்புகளை நாகம் என்று சொல்லும் வழக்கம் நம் நாட்டில் இருந்திருக்கிறது. பாம்புகள் பூமிக்கடியில் வசிப்பதாலும் பூமியைக் குடைந்து அடி மண்ணைப் புரட்டிப் போட்டு எறும்புகள் கட்டும் புற்றுக்குள் பாம்புகள் வசிப்பதாலும் இந்தப் பெயர். பூமியைப் புரட்டிப்போட்டாற்போல வெளிப்பட்டு பிறகு நிலபாகமாக மாறும் பூமிக் குழம்புகள் உள்ள பகுதிக்கு நாகர்கள் வசிக்குமிடம் என்று பெயரானது. இப்படி எங்கெல்லாம் நிலபாகங்கள் ஏற்பட்டனவோ அங்கு வசிப்பவர்களுக்கு நாகர்கள் என்னும் பெயரும் ஏற்பட்டது. புராணங்களில் வாசுகி எனும் நாகம் மேரு மலையை அச்சாகக் கொண்டு, வாசுகியை நாணாகக் கொண்டு தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்தனர் என்பது பல புராணாங்களிலும் சொல்லப்படும் கருத்து. மேரு என்பது வடக்கு தெற்காகச் செல்லும் பூமியின் அச்சாகும். அதன் உச்சி வட துருவமாகும் என்பது சூரிய சித்தாந்தம் தரும் செய்தி. இந்த அச்சு இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த சுழற்சி காரணமாக, பூமியின் வட பகுதியிலும், தென் பகுதியிலும், பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. அந்தச் சுழற்சி காரணமாக, கடலுக்கடியில் இருக்கும் பூமிக் குழம்புகள் கடையப் படுவது போல அலைக்கழிக்கப்படுகிறது. இதனால், பூமியடியில் உள்ள வாயுக்களும், கனிமங்களும், நிலப்பகுதிகளும் மேலும், கீழுமாகப் புரட்டிப் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதுவே ‘சமுத்திர மந்தன்’ என்னும் கடலைக் கடைதல் கதை. இது மறை பொருளாகச் சொல்லும் இயற்கை வர்ணனையாகும். இந்த வருணனையில், பூமியின் அச்சு மேரு மலையாகும். வடபாகம் தேவர்கள், தென் பாகம் அசுரர்கள் ஆவார்கள். கடையப்படும் பூமிக் குழம்பு வாசுகி ஆவாள். இந்தக் கடைதலில் இரண்டு புறமும் நகர்ந்து கொண்டிருப்பது ராகு, கேது என்னும் இரண்டு பாம்புகள். இப்பொழுது நாகர்கள் என்ற விடயத்துக்கு வருவோம் எங்கெல்லாம், பூமிக் குழம்பு வெளிப்பட்டு, குளிர்ந்து, நிலமாக ஆகி இருக்கிறதோ, அங்கு வசிக்கும் மக்கள் நாகர்கள் எனப்பட்டிருக்கிறார்கள். அங்கு நாக வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் காஷ்மீரிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள். இமயமலைப் பகுதிகள் பலவற்றிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை மஹாபாரதம் மூலம் அறிகிறோம். காண்டவப்ரஸ்தத்தில் அர்ஜுனனால் நாகர்கள் விரட்டப்பட்டு விந்திய மலைக்குத் தெற்கே குடியேறினார்கள் என்றும் பாரதம் சொல்கிறது. கிருஷ்ணனது சகோதரனான பலராமன், சேஷனது அவதாரம் என்று சொல்லப்படுபவன். அவனது அடையாளம் கலப்பையாகும். பூமியை உழுது, புரட்டி எடுக்கும் வேலையைச் செய்ததால் அவன் நாகன் எனப்பட்டிருக்க வேண்டும். மஹாபாரதம் 13- 132 –இல் பலராமன் ஒரு நாகன் என்று சொல்லப்பட்டுள்ளது. நாகர்கள் எனப்படுவோர் வட இந்தியா தென் இந்தியா உட்பட இலங்கையிலும் அதிகமாக இருந்துள்ளனர். இலங்கயைில் ஆதிக்குடிகளே இயக்கரும் நாகரும் என்று சொல்கின்றது பெளத்த நுhல்களான மகாவம்சமும் தீபவம்சமும் கூறுகின்றது.. தொடரும்

தமிழனின் மரபணு இப்படியான ஒரு பதிவு ஏன் எழுதவேண்டியதேவை வந்தது. அண்மைக்காலங்களில் சீமான் தமிழன் தமிழன் என்று சொல்வதும் அதற்கு எதிர் தரப்பில் இருந்து சீமான் என்ன டீஎன்ஏ மெசின் வைச்சா தமிழன் என்று சேட்டிபிக்கட் கொடுக்கிறான் என்பதும் தங்களை இதுவரை தமிழன் என்று பிறருக்கு காட்டிகொண்டுவந்தவர்களின் விவாதம். உண்மையாக தமிழனின் டீஎன்ஏ கப்லோ குறூப்தான் என்ன? இது எத்தனை பேருக்கு தெரியும்? இன்று திராவிடத்தை வெறுக்கும் அதிகமான தமிழர்கள்கூட ஆரியம் என்ற கருத்தை கைவிட அவர்கள் தயாரில்லை. அதனால் ஆரியர்களின் டீஎன்ஏ ஐ அறிய முதல் நமது டீஎன்ஏ ஐ அறிவோம். அதிகமாக டீஎன்ஏ என்பது அதிகமாக எல்லோருக்கும் தெரியும் அதை தெளிவாக யாருக்கும் விளங்கப்படுத்தவேண்டிய தேவையில்லை. ஆனால் அதன் பயன்பாடு சரியாக புரிந்து இருக்கின்றதா என்று தெரியாது. குறிப்பாக ஒரு குழந்தைக்கு யார் தகப்பன் என்பதை இப்பொழுது விஞ்ஞான ரீதியாக தெளிவாக உறுதிப்படுத்துவது இந்து பரிசோதனை மட்டும்தான். அப்போ நம்ம பாட்டன் முப்பாட்டனையும் இதன் மூலம் கண்டுபிடிக்கமுடியும்தானே! டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். (சிலர் தமிழில் என்ன பதம் என்று அறியவேண்டும் என்பதற்காக) இந்த இனக்கீற்று அமில பரிசோதனை மூலம் உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் இன்றைய மனிதர்களின் மரபணு மூலக்கூறுகளைக் கொண்டு மனிதனின் மூதாதையர் எங்கு தோன்றினர், பின்னர் மனிதப்பரவல் எங்கெங்கெல்லாம் பரவியது என்பதைக் காண முடியும். அந்த மரபணு ஆய்வின் அடிப்படையில் பழங்கால தொன்மையான மனித இனத்தின் மரபணு வகை இரண்டே இரண்டு தான் உள்ளது. ஒன்று M 1 ஆப்பிரிக்க மரபணு மற்றொன்று M 2 இந்திய மரபணு. இவை இரண்டில் எது அதிக தொன்மையானது என்ற கேள்விக்கு சிலர் ஆப்பிரிக்க வகை என்று சொல்லும்போது, வேறு சிலர் இந்திய தமிழ் மரபணு தான் தொன்மையானது என கூறுகின்றனர். இவை பற்றியே கீழுள்ள ஆங்கிலத்தகவல்கள் விளக்கம் தருகின்றன. தமிழ் தொன்மைக்கு கூறப்படும் காரணம். 1. ஆப்பிரிக்க மரபணு ஆப்பிரிக்கா முழுவதும் இல்லை. எத்தியோப்பியா, எகிப்து பகுதியில் மட்டும் தான் காணப்படுகிறது. 2. தமிழ் (தென்னிந்திய) மரபணு 75 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது மட்டுமல்ல ஆசியா, தென்கிழக்காசியா முழுவதற்கும் மூல அடிப்படையாக இருக்கிறது. M2, M3, M4, M5, M6, M18 மற்றும் M25 வரை எல்லாம் இந்தியாவுக்குரியதுதான். ஆகவே மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் இந்தியாவில் ஏற்பட்ட போர்கள் மற்றும் கடற்கோள்களின் காரணமாக தமிழ் இனம் பல்வேறு இடபெயர்வுகளை சந்தித்திருக்கவேண்டும். ஆகவே அந்தகாரணம்கள்தான் இன்றும் வேறுபிரதேசங்களில் எம் வகையான டீஎன்ஏ இருப்பதற்கு காரணம். இதில் M வகையான DNA Haplogroup 70.18% விகிதமான தமிழர்கள் கொண்டுள்ளனர் இதில் எம் வகையில் Subgroup M5a (14.03%), M2a (12.28%) தமிழ்நாட்டில் கொண்டுள்ளனர். இந்த சப்குறூப் ஆனது (M5a + M2a) வேற இனங்களில் இல்லாத அரிய ரீஎன்ஏ குறூப் ஆகும். ஆகவே நாம் முயன்றால் யார் உண்மையான தமிழன் என்பதனை அடையாளம் கண்டுகொள்ளமுடியும். இதே நிலையை இலங்கையில் பார்த்தால் M (41.67%–43.59%) ஆனால் இலங்கைத்தமிழர்கள் 11.1% சதவிகிதம் பேர்தான் இருக்கின்றனர். மிகுதி யார்????? இதில் அதிகளவு சிங்களவர்களின் டீஎன்ஏயும் தமிழர்களின் டீஎன்ஏயுடன் ஒத்துப்போகின்றது. இதை அறியாமல் சிங்களவர்கள் தமிழர்களை அழிக்க காரணமாகவும் அமைக்கின்றனர். இத்துடன் இந்த பதிவினை முடிக்கின்றேன். அதிகம் எழுதினால் வாசித்து விளங்கிக்கொள்வது கடினம் என்பதனால். (சில நாடுகள் இவ்வாறான ஆராட்சியை மேற்கொண்டு அந்த ஆராட்சி தாங்கள் எதிர்பார்த்தற்கு எதிராகவே அமைந்தது ஆகவே ஆய்வை இடையில் நிறுத்திவிட்டு முன்னும் பின்னும் பொத்திக்கிட்டு போய்விட்டார்கள்) தெலுங்கர் கன்னடர் இலம் திராவிடர்கள் டீஎன்ஏ என்னவென்று பிறிதொரு சந்தற்பத்தில் பார்ப்போம். ஆதாரம் "Molecular Anthropology: Population and Forensic Genetic Applications." Anthropology Today: Trends, Scope and Applications, Anthropologist Special Volume No. 3 (2007) guest-edited by Veena Bhasin and M. K. Bhasin: Chapter 29 on pages 373-383. Page 380. S. S. Papiha, Sarabjit S. Mastana, C. A. Purandare, R. Jayasekara, and R. Chakraborty. "Population genetic study of three VNTR loci (D2S44, D7S22, and D12S11) in five ethnically defined populations of the Indian subcontinent." Human Biology 68:5 (October 1996): pages 819-835. Contrary to Kshatriya's study, but coinciding with Mastana's study, Sinhalese people were found to be less descended from Tamils than from Bengalis. Vajira H. W. Dissanayake, Victoria Giles, Rohan W. Jayasekara, Harshalal R. Seneviratne, Noor Kalsheker, Fiona Broughton Pipkin, and

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! ******************************************************************** தமிழ் பெண்கள் தாலி அணியும் வழக்கம் சங்ககாலத்தில் இல்லை . அந்தப்பழக்கம் இடைக்காலத்தில் தான் புகுத்தப்பட்டது என்பது உண்மை தான். நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ? ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன. மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி.. அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் . அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும். இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது . மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் . நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..! இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..! நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை உங்களால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

"ணந்தை கீரன்" ஓமன் நாட்டில் தமிழ் ஓமன் நாட்டில் கிடைத்துள்ள கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துருகள் ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ணந்தை கீரன் என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்படப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்தவர்கள் ஓமனில் இதனை கண்டுள்ளார்கள். Tamili Script found in Oman Discovery has opened new chapter in understanding maritime trade of Indian Ocean countries, say historians A Tamil script inscribed on a potsherd, which was found at the Khor Rori area in Oman, has come to light now. The script reads “nantai kiran” and it can be dated to first century CE, that is, 1900 years before the present. The discovery in the ancient city of Sumhuram has opened a new chapter in understanding the maritime trade of the Indian Ocean countries, according to specialists in history. It was by chance that the potsherd was sighted. Alexia Pavan, an Italian archaeologist, had displayed the potsherd during an international ceramic workshop on “The Indian Ocean Trade and the Archaeology of Technology at Pattanam in Kerala” held in September in Kochi. P.J. Cherian, Director, Kerala Council of Historical Research (KCHR), and Roberta Tomber of the British Museum, London, had jointly organised the workshop. Pottery from several Indian Ocean countries was on display during the workshop. K. Rajan, Professor, Department of History, Pondicherry University, D. Dayalan, Regional Director, Archaeological Survey of India, and V. Selvakumar, Head of the Department of Epigraphy and Archaeology, Tamil University, Thanjavur, spotted the potsherd displayed by Dr. Pavan. The Italian Mission to Oman (IMTO) had found this potsherd during its second archaeological excavation in 2006 in the Khor Rori area. The Director of the excavation was Alessandra Avanzini and Dr. Pavan was part of the team. Since 1997, the Mission of University of Pisa, forming part of the IMTO, has been working in Oman in two sites: Sumhuram in Khor Rori and Salut in Nizwa. Personal name The potsherd was found in a residential area of Sumhuram city. Dr. Pavan said it was part of a lid made by reusing the shoulder of an amphora. Soot traces visible along the external ridge suggest the use of the lid for a cooking pot. The sherd was discovered in a layer mixed with a few pottery pieces and animal bones, “which [layer] corresponds to one of the most important constructional phase of the city, to be dated to the first century CE,” she said. So the sherd could be dated to first century CE or a little earlier. There was so much of Indian material, including beads, coins and pottery, discovered during the excavation that it was important to show the relationship between India and the southern coast of Oman, she added. The script “nantai kiran,” signifying a personal name, has two components, Dr. Rajan said. The first part “[n] antai” is an honorific suffix to the name of an elderly person. For instance, “kulantaicampan,” “antai asutan,” “korrantai” and so on found in Tamil inscriptions could be cited. The second component “Kiran” also stands for a personal name. More than 20 poets of the Tamil Sangam age [circa third century BCE to third century CE] have “kiran” as part of their personal names. “Thus, the broken piece of the pot carries the personal name of an important trader who commanded a high regard in the trading community,” Dr. Rajan argued. It was generally believed that India’s contact with the Mediterranean world began with the Roman trade and much of the studies were concentrated on the Red Sea ports such as Quseir alQadim and Berenike, both in Egypt. While the excavation at Quseir alQadim yielded potsherds with the Tamil texts reading “kanan,” “catan” and “panai ori,” the one found at Berenike was engraved with the Tamil script “korrapuman.” The latest discovery in Oman was significant as it opened a new avenue in understanding the impact of the Indian Ocean trade, particularly on the we

#சுமேரியா_எகிப்தில்_இந்திரன் #வழிபாடு! #உலகம்_முழுதும்_இந்திரன் #வழிபடப்படுவது_பாரத_மக்களுக்கு #பெருமைதரும்_விஷயமாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து, சரஸ்வதி, கங்கை நதி தீரத்தில் ஒலித்த அதே மந்திரங்கள் இன்று இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்களில் விழாக் காலங்களில் ஒலிப்பதும், “த்ரி கால சந்தியா வந்தனம்” நாள்தோறும் ஒலிப்பதும் அதிசயத்திலும் அதிசயமான விஷயம் ஆகும். அதைவிட அதிசயம், கரிகால் சோழன் முதல் சிலப்பதிகார காலம் வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட இந்திர விழா இன்றும் நேபாளத்தில் அதே பெயரிலும் தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் “நீர்ப் பெருக்கு விழா” (Water Festival) என்ற பெயரிலும் கொண்டாடப்படுவதாகும். இதை எல்லாம் பார்க்கும்போது ‘’ஒல்காப்புகழ் தொல்காப்பியன்’’ ஏன் இந்திரனையும் வருணனையும் தமிழ் தெய்வங்கள் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடினான் என்பதும் இதைவிட வியப்பான விஷயங்களைச் சொல்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம். ஆய் அண்டிரன் என்னும் தமிழ் மன்னனின் பெயரில் உள்ள அண்டிரன் (Andiran) என்பது இந்திரனின் பெயர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் பெண் புலவர் அண்டிரனைப் பாடிய புறநானூற்றுப் பாடலில் இந்த ரகசியத்தை வெளியிடுகிறார். அதை விட வியப்பான விஷயம் எகிப்தில் இந்திர த்வஜத்துடன் இந்திரனைக் கடவுள் என்ற பெயரில் வணங்கியதாகும். சுமேரியர் என்ன சளைத்தவரா? கிரேக்கர்கள் என்ன இளைத்தவரா? அவர்களும் கும்பிட்டதோடு வானத்தில் உள்ள நட்சத்திரத்துக்கும் இந்திரன் பெயர்சூட்டினர். தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்திரன் சிலை இருப்பதும், நேபாளம் முதல் கண்டி வரை இன்றும் மக்கள் தம் மழலைச் செல்வங்களுக்கு இந்திரன், இந்திராணி, சசி போன்ற பெயர்களைச் சூட்டி மகிழ்வதும் நாம் அறிவரும் அறிந்ததே. #இந்திர_அதிசயம்_1 எகிப்து நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் ஹைரோகிளிபிக்ஸ் (hieroglyphs) என்ற சித்திர எழுத்தை எழுதினர். ! இதில் கடவுள் என்பதற்கான சித்திரம் — ஒரு கம்பில் சின்ன துணி சுற்றப்பட்ட படம் ஆகும். இதைத்தான் இந்திரத்வஜத்தின் முன்னோடி என்று சொன்னேன் (த்வஜம் = கொடி) ஏன் தெரியுமா? அந்த சித்திர எழுத்துக்கான ஒலி “ntr” என்.டி.ஆர் என்பதாகும். பழங்கால மொழிகளில் உயிர் எழுத்தை (vowel) எழுதமாட்டார்கள். நாமாகப் போட்டு நிரப்பி பின்னர் அதை வாசிக்கவேண்டும். என் டி ஆர் NTR என்பதில் உயிர் எழுத்துக்களைப் போட்டால் வரும் ஒலி இன் டி ர (INTIRA இந்திரன்)!! ஆக கடவுள் என்றால் எகிப்திய மொழியில் இந்திரன்! இந்திர அதிசயம் 2 சுமேரியாவில் அண்டர ANDARA என்றால் இந்திர என்று ஒரு புத்தகம் (India We Lost) கூறுகிறது. சுமேரிய, பாபிலோனிய மெசபொட்டோமிய நாகரீகம் நிலவிய இராக், சிரியா பகுதியில் 3000 கடவுள் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி (Dictionary of the Near East) கூறுகிறது. பழைய பாரசீக மொழியில் உள்ள Zend Avesta செண்ட் அவஸ்தாவில் இந்திரன் பெயர் இரண்டு இடங்களில் வருகிறது என்றும் அதுவும் அண்டிர என்ற சப்தத்தில் இருப்பதாகவும் இன்னொரு நூல் பகரும். #இந்திர_அதிசயம் 3 இந்திய புராணங்களில் இந்திரன் மனைவி பெயர் அய்ந்திரி Aindri. ஆக கணவன் பெயர் அய்ண்டிரன் என்பதில் பொருத்தம் உளது. மேலும் இந்திரன் மனைவி இந்திராணி, புலோமன் என்ற அசுரனின் பெண். ஆக ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை பொய் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்திரன் கொன்ற 30 அசுரர்களில் இருவர் பிராமணர்கள்! ஆக இதுவும் ஆரிய திராவிட இனவெறிக் கொள்கையைத் தகர்க்கிறது. இந்திர அதிசயம் 4 கிரேக்கர்கள் கும்பிட்ட ZEUS சூஸ், ரோமானியர்கள் கும்பிட்ட JUPITER ஜூபிடர், நார்வீஜியர் கும்பிட்ட THOR தோர், கெல்ட்ஸ் கும்பிட்ட TARANIS தாரனிஸ் ஆகியோர் இந்திரன் போன்றே “இடி” எனும் வஜ்ர ஆயுதத்தை THUNDERBOLT கையில் வைத்திருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம். இதைவிட முக்கியமான செய்தி கேட்டை நட்சத்திரம் ஆகும். “ஜ்யேஷ்டா” என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த நட்சத்திரத்துக்கு அதிதேவதை இந்திரன். அந்த கிரேக்க நட்சத்திரத்தின் பெயர் ANTARES அண்டாரெஸ். அண்டிரன் என்பதையே இப்படி சொல்கிறார்கள். அவருக்கு இதற்கு விளக்கம் கிடைக்காததால் கஷ்டப்பட்டு இதற்கு வேறு பொருள் கற்பித்தனர்! இந்திர அதிசயம் 5 ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாடல் PURANANURU 240-மற்றும்-241-ல் இரண்டு முக்கியச் செய்திகளைக் கூறுகிறார். 1.ஆய் அண்டிரன் இறந்தவுடன் “வச்சிரத் தடக்கை நெடியோன் கோவிலில்” அவனை வரவேற்க முரசுகள் முழங்கி வானில் ஒலி எழுந்தது என்கிறார் புலவர்.— இதற்கு மூன்றுவிதப் பொருள் உண்டு (அ) அவர் இறந்த அன்று மழைமூட்டமாக இருந்ததால் இடி இடித்தது (ஆ) அவர் நிறைய கொடையளித்துப் புண்யம் சம்பாதித்ததால் அவர் சொர்க்க (இந்திர) லோக

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்! - முகநூல் பகிர்வு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்... இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை. நதிகளை காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். ஓலைச்சுடி மூலம் நம் பாரம்பரியத்தை இன்றும் பறை சாற்றி வரும் பனைமரம்பரியத்தை இன்றும் பறை சாற்றி வரும் பனைமரம்

சிதம்பர ரகசியம் :-) பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..? இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!! சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான். (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ). (2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். (3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. ((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). (5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். (6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது. (7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது, (8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. (9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது. (10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. உங்கள் சந்தோஷ்

ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்.. விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்... சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்.. இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும். தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது. ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் . அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்... அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி. ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன். கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் எங்கள் பாட்டன்,பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விசயங்களை.. - தமிழர்கள்

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது... இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... . முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்.. இது சரியா தவறா ?!! முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன? சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது.

இது பண்டைய காலத்து AC (Air Conditioner). இயற்கையை பாழ்படுத்தாத AC. புறநானூறு விளக்கும் அதிசயம்: ----------------------------------------------------------------------------------- பண்டைய காலத்தில் இன்றைக்கு போல Mechanical AC வசதியெல்லாம் இல்லை. ஆனாலும் மக்கள் வெயில் காலங்களில் குளுமையுடனேயே வாழ்ந்துள்ளனர். அதற்காக அவர்கள் செய்து கொண்ட தொழில்நுட்பம் மிகவும் எளிமையானது. அதை புறநானூற்றின் வாயிலாகவே அறிவோம் வாருங்கள். “தைஇத் திங்கள் தண் கயம் போல கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்” (புறம் 77) ”புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப், பனிக்கயத் தன்ன நீள்நகர்”(புறம் 378) பொருள்: ------------- கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைக்கப்பட, தை மாதத்தில் பொய்கை குளிர்ந்திருப்பதைப் போலக் குளிர்ச்சியாகவும் அகலமாகவும் வீடுகள். புதிதாய்த் தோன்றிய பிறைநிலா போன்று வெண்மையான சுதையால் செய்யப்பெற்ற மாடத்தையும் குளத்திலுள்ள பனிநீர் போன்று குளிர்ச்சியையும் உடைய அரண்மனை. தெளிவான விளக்கம் மற்றும் அறிவியல்: ------------------------------------------------------------- சுதை என்றால் சுண்ணாம்பு. பண்டைய காலங்களில் அனைத்து வீடுகளிலும் சுண்ணாம்பு தொட்டியும் தொட்டி நிறைய நீரும் இருக்கும். இந்த வகை தொட்டியை இன்றைக்கும் பல கிராமங்களில் காணலாம். சுண்ணாம்பானது நீரை குளிரூட்ட வல்லது. இவ்வகை தொட்டியை வீட்டின் நடுவில் நீர் நிரப்பி மலர்களால் அலங்கறித்து வைத்துவிடுவர். இதன் இரகசியம் வீட்டை குளுமைப் படுத்துவதற்காகவே. இதன் காரணத்தால்தான் வீட்டிற்கு பண்டிகை காலங்களில் சுண்ணாம்பு பூசி வெண்மைபடுத்தி, வீட்டை குளிரூட்டுவர். --------------------------------------------------------------------------------- இன்றைய காலகட்டத்தில் Distemper, Paint என்று வீட்டை அழகுபடுத்துவதற்குதான் முனைகிறார்களே தவிற ஆரோக்கியமான வீட்டை கட்டுவதற்கு எவர் முன் வருகிறார்?. நாமும் இந்த முறை பின்பற்றி வீட்டை குளிரூட்டலாமே.....

தமிழ் மாதங்கள்...

இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலாக அச்சுப்புத்தகம் வெளியிடப்பட்டது. புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' எனும் கிருத்துவநூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் அண்டிறிக்கி என்பவர். கொல்லத்தில் அந்நூல் அச்சாக்கப்பட்டு இன்றுடன் 433 ஆண்டுகளாகின்றன.... (20.10.1578) (தமிழ்நாடன் எழுதிய 'தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம்' நூலிலிருந்து)

சிந்து சமவெளி நாகரீகம் 5,500 ஆண்டுகளுக்கு முந்தையது அல்ல; அது 8,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அகழ்வாய்வாளர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிறு வயதில் சரித்திர (இன்றைய சமுக அறிவியல்) பாடத்தில் உலகின் பல நாகரீகங்கள் குறித்து படித்திருப்போம். நாகரீகங்கள் பெரும்பாலும் ஆற்றுப்பகுதியை ஒட்டிதான் தோன்றி வளர்ந்தன என வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். இதன் அடிப்படையில், சிந்து சமவெளி நாகரீகம் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முந்தையது என அப்ேபாது கிடைத்த அகழ்வாராய்ச்சி முடிவுகளின்படி கணித்தனர். இதுவே வரலாற்றிலும் இடம் பெற்றது. ஆனால், ஹரப்பா நாகரீகத்துக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரீகம் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. கோரக்பூர் ஐஐடியின் நில அமைப்பியல், புவி இயற்பியல் துறை தலைவர் அனிந்தியா சர்க்கார் தலைமையிலான குழு மற்றும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் இணைந்து புதிய ஆய்வை மேற்கொண்டனர். இது தொடர்பான கட்டுரை ‘நேச்சர்’ என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அகழ்வாராய்ச்சியின்போது, மண்பாண்டங்களின் பாகங்கள் கிடைத்தன. இவற்றின் வயதை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம். இதில் இவை 6000 ஆண்டுகளுக்கு முந்தயை ஹரப்பா நாகரீகத்தை விட தொன்மையானது என்பது தெரியவந்தது. எனவே சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த நாகரீகம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பான 7,000-3000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து நாகரீகம், 6,500-3,100 ஆண்டுகளுக்கு முந்தைய மெசபட்டோமியா நாகரீகத்துக்கும் முந்தையது. சிந்து சமவெளி நாகரீகம் இதற்கு முன்பே வேரூன்ற தொடங்கி விட்டது. இந்த நாகரீகம் அரியானாவில் பிர்ரானா, ராஹிகார்ஹி போன்ற இடங்களுக்கும் பரவியது. இந்த இடங்களில் அகழ்வாய்வை மேற்கொண்டோம். இங்கு அதிக எண்ணிக்கையிலான பசு, ஆடு, மான், கலைமான் போன்ற விலங்குகளின் எலும்புகள், பற்கள், கொம்புகள் கிடைத்தன. இவற்றை, ‘கார்பன் 14’ டேட்டிங் பகுப்பாய்வு முறையில் சோதனை செய்தோம். இதன் மூலம் இவற்றின் வயது, அப்போதிருந்த பருவ நிலையை தெரிந்து கொள்ள உதவியது. சிந்து சமவெளி நாகரீகம் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. குறிப்பாக இப்போது மறைந்துவிட்ட சரஸ்வதி நதி அல்லது காஹர்-ஹக்ரா நதியின் கரையோர பகுதிகளில் இது நிறைந்து காணப்பட்டது. ஆனால் இவை குறித்து நமக்கு தெரியாமலேயே போய்விட்டது. நாம் ஆங்கிலேயர்களின் தொல்லியல் முடிவுகளைதான் பின்பற்றி வந்தோம். எங்களது அகழ்வாய்வின்போது, சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தைய (அதாவது 9000-8000 ஆண்டுகளுக்கு முன்பு) ஹரப்பா நாகரீகம் தொடங்கிய காலம் தொடங்கி (8000-7000 ஆண்டுகள்) நன்கு வளர்ந்த ஹரப்பா நாகரீக காலம் வரையிலான பாதுகாக்கப்பட்ட அனைத்து கலாசார நிலைகளையும் கண்டோம். ஹரப்பா காலத்தில் திட்டமிடப்பட்ட நகரங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. அரேபியா, மெசபட்டோமியா நகரங்களுடன் வர்த்தகம் செய்து வந்துள்ளனர். சிந்து சமவெளி பகுதி மக்கள் நிலையானவர்கள். உறுதியானவர்கள். பருவமாற்றங்களை பற்றி கவலை கொள்ளவில்லை. அதிக தண்ணீர் தேவைப்படும் கோதுமை, பார்லி முதல் வறட்சி தாங்கும் பயிர்களையும் மாற்றி மாற்றி பயிரிட்டுள்ளனர். மகசூல் குறைய தொடங்கியவுடன் விளைந்தவற்றை சேமிக்கும் முறைகளை பிற்கால ஹரப்பா மக்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் நகரங்களை விட்டு இடம் பெயர்வது குறைந்தது. இவர்கள் காலத்தில் தனிதனி வீடுகளில் வசிக்கும் பழக்கம் தொடங்கியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தினகரன் 30.05.2016)

“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை! வணக்கம் நண்பர்களே.!!! சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன். தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம். ’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு- கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்)RFIDRFID உதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு: ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்: தமிழா-மியான்மர் சபா சந்தகன் – மலேசியா கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா கடாலன் – ஸ்பெயின் நான்மாடல், குமரி,- பசிபிக் கடல் சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ திங் வெளிர்- ஐஸ்லாந்து கோமுட்டி-ஆப்ரிக்கா இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன. இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!! பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’. Tamil bell Found in New ZealandTamil bell Found in New Zealand நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும். இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது. இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது. கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல

இதன் பெயர் 'கோட்டை' நம்முடைய பாரம்பரிய விதை சேகரிப்பு தொழில் நுட்பம், விதைகளை வைக்கோலால் கட்டி , அடுத்த நாள் சாணியால் மெழுகி வைத்து விடுவர், ஒரு வருடத்திற்கு ஒன்றுமே ஆகாது, மேலும் திரும்ப முளைப்பதற்குத தேவையான தட்ப வெப்பமும் இதில் பேணப்படுகிறது,, உண்மையில் எனக்குப் புல்லரித்தது

தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம் நண்பர்களே கோபுரம் கட்டி உச்சத்தில் செம்பினை நட்டு வழிபடும் முறையை செய்திடுவோம் அது இடியை தடுத்து பலர் குடியை காக்கும் அதிசய அறிவியல் செய்திடுவோம் ............! கோவில் சுவற்று கருங்கல் எல்லாம் மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால் மனதில் ஒருநிலை எனபது கிடைத்திடுமே .! எங்கள் கோவில் மணியின் அதிர்வுகள் கூட சமநிலை அலைகளை பரப்புமடா அடித்தவன் காதில் தெறிக்கும் போது உற்சாக ஊற்று பெருகுமடா .....! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சரணம் போட்டு சென்றிடுவோம் அதில் அக்குபஞ்சர் அறிவியல் முறையில் இரத்த ஓட்டம் பெருக்கிடுவோம் ........! சாணம் கரைத்து வீட்டில் தெளித்து ஆன்டி-பயோடிக் செய்திடுவோம் நாளும் தூய்மை காத்திடுவோம் .......! மார்கழி பொழியும் மாக்கோலம் வரைவோம் அதை ஊர்வன உண்டு பிழைத்திடுமே இந்த ஊனில் தூயக்காற்று கிடைத்திடுமே .....! ஈர நெற்றியில் காய்ந்த விபூதி பட்டை அடித்து திரிந்திடுவோம் தலை நீர் உறிந்து தலை வலி குறையும் அதிசயம் தன்னை நடத்திடுவோம் ...........! குனிந்து நிமிர்ந்து பெண்களை எல்லாம் வேலை செய்ய சொல்லிடுவோம் இடுப்பு எலும்பு விலக்கம் அடைகையில் சுக பிரசவம் தன்னை அடைந்திடுவோம் .......! சூரியன் உதிக்கும் முன்பும் மறைந்த பின்பும் உணவை கையில் தொடமாட்டோம் இரவில் உணவு ஜீரண குறைவு அதிலும் அறிவியல் வைத்ததை சொல்லமாட்டோம் .............! தலையில் கொட்டி கணபதி வணங்கி அந்நாளை இனிதாய் தொடங்கிடுவோம் நினைவாற்றலை நாளும் வளர்த்திடுவோம் .....! சனியின் கண்ணில் புற ஊதாக்கதிரை கண்டு அவன் கண்ணை கருப்பு துணியால் கட்டி வைத்தவன் தமிழனடா .........! நாலாயிரம் நோயை ஒன்றாய் போக்கும் அதிசயம் அறிந்தவன் தமிழனடா துளசி மாடம் வீட்டில் வைத்து வணங்கியது அந்த நோக்கமடா...........! இன்னும் சொல்ல ஆயிரம் உண்டு என்னிடம் வந்து கேளுமடா விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டும் கற்ற அறிவியல் மேதை தமிழனடா என் தாத்தன் பாட்டன் வாய்வழி சொன்ன ஒற்றை நூல் தான் உன் அறிவியல் என்பதை உணருமடா.

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்.... பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................ பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......! கல்லணை :- உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ? மாமல்லபுரம் :- கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ? அங்கோர்வாட்_கோயில் :- உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும். திருநள்ளாறு_காரி_ஈசன்_கோயில் :- எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை. கடல்_நடுவே_ராமேசுவரம் :- கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும். தஞ்சாவூர்_பெருவுடையார்_கற்கோயில்:- கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில் கி.பி.(700-720) 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது தமிழ் நாட்டின் முதல் கருவறைமேல் விமானம் தாங்கிய கோயில் பல்லவர்கள் குடவரைகோயில்கள் வடிவத்திலிருந்து மாறி புதியவடிவத்தை கண்டுபிடித்தனர் அதுதான் மணற்கற்கல்(sand stone) இந்த கோயில் முழுவதும் மணற்கற்களால் மட்டுமே கட்டப்பட்டதுள்ளது இந்த கோயிலை பார்த்தப்பிறகுதான் இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் நான்கு வகையான கல்வெட்டு எழுத்துகள் உள்ளன 1.நாகரி எழுத்து 2.கிரந்தம் எழுத்து 3.நன்குஅலங்கரிக்கப்பட்டகிரந்தம் எழுத்து 4.பூ வேலைப்பாடு கொண்ட கிரந்தம் எழுத்து பல்லவ மன்னன்ர்கள் சோழ மன்னன்ர்கள் விஜயநகர மன்னன்ர்கள் முகாலாய மன்னன்ர்கள் யாருமே இந்த கோயிலை சேதபடுத்தவில்லை எங்கு பார்த்தாளும் பிரமிப்பு வாழ்க்கையில் ஒருமுரையேனும் ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில் வந்துபாருங்கள். -அறம் கிருஷ்ணன்

இந்தியாவின் முதல் அணை கட்டிய தமிழன் !!! பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே .ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை. ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று . உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டியது .....
தமிழன் சாதித்த கட்டிடக்கலை! உங்கள் கையால் தொடலாம், உருட்டலாம், முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது. கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம். இடம்: திருவாசி, திருச்சி அருகில்
எறும்பை வைத்தும் மழையை அறியலாம் என்கிறது புறநானூறு. எறும்பும் மழை பெய்யும் அறிகுறியைக் காட்டும். பண்டய தமிழ்ர்களின் அறிவு எவ்வளவு நுணுக்கமானது என்பதை இந்தப் பாடலின் மூலம் நாம் அறியலாம். அது மட்டுமல்லாது நம் முன்னோர்கள் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரையும் எவ்வளவு நேசித்துப் பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதை இந்தப் பாடலின் மூலம் அறியலாம். "பொய்யா எலிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வன்புலம் சேரும் சிறு நுண் எறும்பு சில் ஒழுக்கு எய்ப்ப (சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்" - புறநானூறு 21) பொருள்: சிறிய எறும்பு கூட்டம் மழை வரப்போவதை காற்றின் மூலம் அறிந்து தன் முட்டைகள் நீரில் அடித்துப் போகா வண்ணம் காப்பதற்காக தன் முட்டைகளை மேட்டு நிலப்பகுதியை நோக்கி எடுத்துச் செல்லுமாம். இந்த நுண்ணிய ஜீவனின் ஒழுக்க நெறியைப் பாரீர் என்கிறார் புலவர். இந்தப் பாடலின் மூலம் நாம் அறிவது என்ன நம் முன்னோர்கள் சிறிய உயிரினங்களிடமும் நாம் கற்றுக் கொள்ளும் விசயங்கள் உள்ளன என்பதை எடுத்துரைக்கின்றனர். இதை நாம் அறிவியல் கண் கொண்டும் காணலாம் வாழ்வியல் நெறி கண் கொண்டும் காணலாம்.
தமிழனின் அறிவியல்!!! தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம். தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது. அதன் உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும். இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு. இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள். சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது; ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று அர்த்தம். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள். நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத் துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள். சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.. பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன.

தமிழர் பண்பாடு

பகுதி...59... பசுவின் சாணம் கிருமி நாசிணி மட்டுமல்ல காற்றின் மூலம் விஷவாயுவையும் கட்டுபடுத்தும் தன்மையுள்ளது அணுக்கதிர் வீச்சையும் முறியடிக்கும் சக்தியுடையது பசுவின் சாணம் என்பதை அறியவும்.மேலும் அவ்வீட்டிலுள்ள பெண்கள் காலையில் துயிலெழுந்து பசுவின் சாணத்தை கரைத்து வாசலில் தெளித்து பெருக்கி தூய்மைபடுத்தும் போது , இரவில் நமது பூமி வெளியிடும் தாக்கத்தை கட்டுபடுத்துகிறது , மேலும் கிருமிகள் வாசல் வழியாக நம் வீட்டினுள் நுழைவதையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் தரையிலிடப்படும் அரிசி மாவு கோலத்தால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், எறும்பு , பூச்சிகளுக்கும் உணவாக கிடைக்கப்பெறுகிறது. இவைகளை உண்ணும் இவ்வுயிர் வகைகள் நமக்காக இறைவனிடம் எனக்கு இந்த வீட்டில் தினசரி உணவளிக்கிறார்கள் , இவர்கள் சுபிட்சமாக வாழவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுமாம் , ஆம் நமக்காக நாமே வேண்டிக்கொள்வதை விட பிறர் வேண்டிக்கொண்டால் சக்தி அதிகம் தானே ? இப்படி ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பாக பசுவின் சாணம் கரைத்து தெளிப்பதன் மூலம் காற்றில் பரவியுள்ள விஷவாயு ,கிருமிகள் அனைத்தும் அழித்து காற்று மண்டலத்தை சுத்தப்படுத்தப்படுகிறது , இது ஒருவருக்காகவா? இல்லையே, எல்லோரும்...