பகுதி...59... பசுவின் சாணம் கிருமி நாசிணி மட்டுமல்ல காற்றின் மூலம் விஷவாயுவையும் கட்டுபடுத்தும் தன்மையுள்ளது அணுக்கதிர் வீச்சையும் முறியடிக்கும் சக்தியுடையது பசுவின் சாணம் என்பதை அறியவும்.மேலும் அவ்வீட்டிலுள்ள பெண்கள் காலையில் துயிலெழுந்து பசுவின் சாணத்தை கரைத்து வாசலில் தெளித்து பெருக்கி தூய்மைபடுத்தும் போது , இரவில் நமது பூமி வெளியிடும் தாக்கத்தை கட்டுபடுத்துகிறது , மேலும் கிருமிகள் வாசல் வழியாக நம் வீட்டினுள் நுழைவதையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் தரையிலிடப்படும் அரிசி மாவு கோலத்தால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், எறும்பு , பூச்சிகளுக்கும் உணவாக கிடைக்கப்பெறுகிறது. இவைகளை உண்ணும் இவ்வுயிர் வகைகள் நமக்காக இறைவனிடம் எனக்கு இந்த வீட்டில் தினசரி உணவளிக்கிறார்கள் , இவர்கள் சுபிட்சமாக வாழவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுமாம் , ஆம் நமக்காக நாமே வேண்டிக்கொள்வதை விட பிறர் வேண்டிக்கொண்டால் சக்தி அதிகம் தானே ? இப்படி ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பாக பசுவின் சாணம் கரைத்து தெளிப்பதன் மூலம் காற்றில் பரவியுள்ள விஷவாயு ,கிருமிகள் அனைத்தும் அழித்து காற்று மண்டலத்தை சுத்தப்படுத்தப்படுகிறது , இது ஒருவருக்காகவா? இல்லையே, எல்லோரும்...
No comments:
Post a Comment